நோக்கு

மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு அன்பு நிறைந்த உலகமொன்றைக் கட்டியெழுப்புவது மற்றும் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கச்செய்தல்

செயற்பணி

மனவளர்ச்சி குன்றிய நபர்களுக்கு அன்பையும் பாசத்தையும் வழங்குவதன் மூலம் அவர்களின் ஆற்றல்களையும் திறன்களையும் வளர்த்துக்கொள்ளுவதற்கு சந்தர்ப்பமொன்றை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களை உற்பத்தி செயற்பாட்டில் பங்களிக்கச் செய்வதன்மூலம் தேசிய அபிவிருத்தியில் பங்காளர்களாக்கிக்கொள்ளுதல்

வரலாறு

சமூக சேவை திணைக்களத்தின் நவோதய கருத்திட்டத்திலேயே துணை கிளையாக 2001 யூலை மாதம் 31ஆம் திகதி பெற்றோர்களின் பாதுகாப்பு கிட்டாத மனவளர்ச்சி குன்றிய ஆண்பிள்ளைகளுக்கு சேவை வழங்குவதற்காக இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்த அரசாங்கத்தில் இதற்காக பூரண அனுசரணை கிடைத்துள்ளது. நிறுவனத்திற்கு சுமார் 17 ஏக்கர் காணியை கம்பஹா, உடதுன்பிட்டிய, வரபலானையில் வாழ்ந்து மரணமடைந்த திரு. ஜயவீர ஆரச்சிலாகே லுவிஸ் சிஞ்ஞோ நன்கொடையாக அளித்துள்ளார். பிற்காலத்தில் அவரை நினைவுகூர்வதற்காக இந்நிறுவனத்திற்கு ஜயவிரு செவன என பெயரிடப்பட்டுள்ளது. தற்பொழுது இந்நிறுவனத்தில் சுமார் 80 ஆண்பிள்ளைகளுக்கு வதிவிட வாதுகாப்பு வழங்கப்படுகின்றது.

நிறுவன நிகழ்ச்சித்திட்டம்

பயண வழி

கொழும்பு - அவிசாவல ஹைலெவல் வீதியில், அவிசாவெலைக்கு சமீபத்தில் புவக்பிட்டிய நகரத்திலிருந்து வலப்பக்கம் உள்ள ஹேவாஹின்ன பாதையில் சுமார் மூன்றரை கிலோமீற்றர் போகும்போது நோர்த் அம்பலம்வத்த வரும். அதைக் கடந்து போகும்போது ஜயவிரு செவன அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    ஜயவிரு செவன நிறுவனம்,
    நோர்த் அம்பலம்வத்த, புவக்பிட்டிய.
  • +94 363 361 999
  • -
  • jayawirusewanasamadhi[at]gmail.com