நோக்கு

இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்குப் புனர்வாழ்வளித்து சிகிச்சையளிக்கும் முதன்மை நிறுவனமாக இருத்தல்

செயற்பணி

உண்மையான வாழ்க்கைத் தத்துவத்தையும் வாழ்க்கையின் உண்மையான மகிழ்ச்சியையும் சொல்லிக்கொடுப்பது ஆற்றல்களை மெருகூட்டுவது என்பவற்றின்மூலம் போதைப்பொருள் மீதுள்ள கவர்ச்சியை குறைத்து போதைப்பொருளுக்கு பலியான இளம் சந்ததியினரை தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கச்செய்வது எமது சேவையாகும்

வரலாறு

சமூக சேவை திணைக்களத்தின் நவோதய கருத்திட்டத்திலேயே துணை கிளையாக 2007/07/31ஆம் திகதி புவக்பிட்டிய மனவளர்ச்சி குன்றிய சிறுவர் இல்லம் ஆரம்பிக்கப்பட்டது. அப்போதிருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அம்மையாரின் அரசாங்கத்தில் இதற்காக பூரண அனுசரணை கிடைத்துள்ளது. நிறுவனத்திற்கு சுமார் 17 ஏக்கர் பெறுமதியான காணியை நன்கொடையாக அளித்தவர் கம்பஹா, உடதுன்பிட்டிய, வரபலானையில் வாழ்ந்து மரணமடைந்த திரு. ஜயவீர ஆரச்சிலாகே லுவிஸ் சிஞ்ஞோ. பிற்காலத்தில் அவரை நினைவுகூர்வதற்காக ஜயவிரு நிறுவனம் என பெயரிடப்பட்டுள்ளது.

சேவைகள்

  • உடல் நலத்திற்கான யோகாசனம்
  • மன ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதற்கான சமய நிகழ்ச்சிகள்
  • குழு உணர்வை மேம்படுத்துவதற்காக குழு நிகழ்ச்சித்திட்டங்கள்
  • இரசனையை ஏற்படுத்தும் அழகியல் நாடகம், நடனம், இசை நிகழ்ச்சிகள்
  • மன சமநிலையை வளர்த்துக்கொள்ளுவதற்காக விவசாய மற்றும் சூழல் சார்ந்த செயற்பாடுகள்
  • மகிழ்ச்சி மன இலகுநிலை என்பவற்றை ஏற்படுத்துவதற்காக குடும்ப உளவளத்துணை மற்றும் தனிப்பட்ட உளவளத்துணை
  • வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கு தேவைப்படும் சக்தியை வளர்ப்பதற்காக மாலை சந்திப்பு மற்றும் காலை சந்திப்பு நிகழ்ச்சித்திட்டங்கள்
  • விளையாட்டு நிகழ்ச்சித்திட்டங்கள்
  • தொழில்புரிபவராக சமூகமயமாவதற்குத் தேவையான ஏற்றுக்கொள்ளப்பட்ட வாழ்க்கைத்தொழிற் பயிற்சி

குறிக்கோள்கள்

  • நீங்கள் இழந்த மகிழ்ச்சியை மீண்டும் பாதுகாத்துக்கொள்ளுதல்
  • உங்கள் தாய்க்கு, மனைவிக்கு, சகோதார சகோதரிகளுக்கு, மகளுக்கு, மகனுக்கு கிடைக்காமல்போன பாசத்தை மீண்டும் கொண்டுவருவதற்கு
  • தாய்நாட்டுக்கு பெறுமதியான பிரசையாவதற்கு
  • வாழ்க்கையில் துன்பப்படுவதற்கு அல்ல. வாழக்கையை அனுபவிப்பதற்கு
  • இழந்த ஆரோக்கியமான இன்பத்தை மீண்டும் பெறுவதற்கு
  • பெருமிதத்துடன் பிரசையாக வாழ்வதற்கு கைகொடுத்து உதவுவதற்கு

பயண வழி

கொழும்பு - அவிசாவல ஹைலெவல் வீதியில், அவிசாவெலைக்கு சமீபத்தில் புவக்பிட்டிய நகரத்திலிருந்து வலப்பக்கம் உள்ள ஹேவாஹின்ன பாதையில் சுமார் மூன்றரை கிலோமீற்றர் போகும்போது நோர்த் அம்பலம்வத்த வரும். அதைக் கடந்து போகும்போது ஜயவிரு சமாதி அமைந்துள்ளது.

  • நிலையப் பொறுப்பதிகாரி,
    ஜயவிரு சமாதி நிறுவனம்,
    நோர்த் அம்பலம்வத்த, புவக்பிட்டிய.
  • +94 112 253 503
  • +94 112 253 503
  • vtcseeduwasrilanka[at]gmail.com