புதிய வீட்டின் கட்டுமானம்
- பதிலளித்தவரின் பெயர் - திருமதி டி.எம்.பஞ்சமி
- நிதி நிதியுதவி - ஊவா மாகாண சமூக சேவைகள் துறை
- தொழிலாளர் பங்களிப்பு - சமூக நல பிரிவு மற்றும் முதியோர் அமைப்பு
வீடு பின்னர்
வீடு கட்டுமானத்தில் உள்ளது
இன்று முகப்பு
ஓரங்கட்டப்பட்டுள்ள மற்றும் பாதகமான நிலைக்கு உள்ளாகியுள்ள மக்கள் பிரிவை இலக்காகக் கொண்டு அவர்கள் முகம் கொடுத்துள்ள சிக்கல்களை கட்டுப்படுத்துகிற அதேவேளையில், சுயமுயற்சியுடன் எழுச்சியடையச் செய்து தேசிய அபிவிருத்திக்கு செயலூக்கமுள்ள பங்காளர்களாக்குவது சமூக சேவைகள் திணைக்களத்தின் பிரதான நோக்கமாகும். அதற்காக எமது நிறுவனத்தின்மூலம் கொள்கைகளைத் திட்டமிடல், தேசிய மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரைக்கும் பல்வேறு ஆய்வுகளும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற நலனோம்பல் நிகழ்ச்சித்திட்டங்களுக்கிடையில் வாழ்க்கைத்தொழிற் பயிற்சியை வழங்குதல், சமூகமயப்படுத்துதல், நடப்பு சமூக பிரச்சினைகளைக் குறைத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு வதிவிட புனர்வாழ்வளித்தல் போன்ற நிகழ்ச்சித்திட்டங்களும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிகளில் அடங்குகின்றன.
வீட்டு மட்டத்திலிருந்து அங்கவீனமுற்ற நபர்களினைப் புனர்வாழ்வளித்தல், சமூகத்துடன் ஒன்றிணைத்தல் மற்றும் சேவைகளினை வழங்குதல் இந்நிகழ்ச்சித் திட்டத்தினூடாக நிறைவேற்றப்படுகிறது.
தாங்கள் 16 – 35 வதிற்கிடைப்பட்ட செவிப்புலனற்ற, வாய்பேசாத, விழிப்புலனற்ற, மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் அங்கவீனத்தினைக் கொண்ட திருமணமாகாத இளைஞர் அல்லது யுவதியாயின் பெருமைமிக்க குடிமகனாக சமூகத்துடன் ஒன்றிணைவதற்கு எம்முடன் ஒன்றிணையவும்.
உங்களின் பிள்ளை பிறந்த வேளையில் குழந்தைப் பருவத்தில் அல்லது அதன் பின்னர் வளர்ச்சியில் சிக்கல் அல்லது தாமதம், அங்கவீன நிலை ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டிருப்பின் முன்பிள்ளைப் பருவ விருத்திக்கு நாம் தயாராகவுள்ளோம்.
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களினை இழந்த மெதுவான உளவளர்ச்சியுடன் சமூகத்தில் பின்தள்ளப்பட்ட நபர்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.
விழிப்புலனற்ற நிலைக்குட்பட்ட நபர்களுக்குத் தேவையான சேவைகளினை வழங்குதல், புனர்வாழ்வளித்தல் மற்றும் நிவாரணங்களினை வழங்குதல் தொடர்பில் இந்நிதியம் செயற்படுத்தப்படுகிறது.
செவிப்புலனற்ற மற்றும் வாய்பேசாத சமுதாயம், பொது சமூகத்துடன் தொடர்பாடல் செயற்பாடுகளினை முன்னெடுப்பதற்கும் அவர்களின் செயற்பாடுகளினை இலகுபடுத்துவதற்கும் தேவையான சைகை மொழிச் சேவையினை வழங்குவதற்கு எமது உத்தியோகத்தர்கள் எவ்வேளையிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நீங்கள் அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர் அல்லது உங்களின் அன்புக்குரியவர், போதைக்கு அடிமையாகியிருப்பின் அவ்வாறான நபர்களினைப் புனர்வாழ்வளித்தல், அவர்களின் தொழில்வாண்மைத் திறன்களினை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்துடன் ஒன்றிணைப்பற்கு எமது உதவியினை வழங்குகிறோம்.
நீங்கள் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட செவிப்புலனற்ற, பேசமுடியாத, கட்புலனற்ற, மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுள்ள திருமணமாகாத வாலிபரா? அல்லது இளம் பெண்ணா? அப்படியானால் எங்களுடன் சேருங்கள். உங்களை பெருமைமிக்க பிரசையாக உயர்த்துவதற்கு அரச நிறுவனம் என்ற வகையில் நாம் தயாராக இருக்கிறோம்.
සමාජ සේවා දෙපාර්තමේන්තුවේ 34 වන අධ්යක්ෂතුමිය ලෙසින් දර්ශනී කරුණාරත්න මහත්මිය 2024.01.04 දින වැඩ භාර ගන්නා ලදී.
Vocational Instructors Sign Language Interpreter Matron Pre School Teacher Cook Assistant Attendant
Annual Transfer Attendent වාර්ෂික ස්ථානමාරු උපස්ථායක Annual Transfer Instructors වාර්ෂික ස්ථානමාරු උපදේශක Annual Transfer Development Officers වාර්ෂික...
පහතින් දක්වා ඇත්තේ 2023.09.10 දින සිළුමිණ පුවත්පතේ පළවූ දැන්වීමකි. සමාජ සේවා දෙපාර්තමේන්තුවේ කැටවල, වත්තේගම, සීදූව, අමුණුකුඹුර,...
வெள்ளைப் பிரம்பு என்பது கட்புலனற்ற நபர்களின் அசைவையும் திசையையும் பூர்த்திசெய்கின்ற கருவியாகும். இந்த கருவி கட்புலனற்ற நபர்களின் அடையாள குறியீடாகவும்...
அகில இலங்கையில் 331 பிரதேச செயலகங்களில் சுயசக்தி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளினதும் அவர்களுடைய குடும்பத்தில் வாழ்கின்றவர்களினதும் வாழ்க்கை நிலையை உயர்த்துவதை...
சமூக சேவைகள் திணைக்களத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள மாற்றுத் திறனுள்ள நபர்களின் கலை திறன்களை அரங்கேற்றும் நோக்கில் "சித்...
வீடு பின்னர்
வீடு கட்டுமானத்தில் உள்ளது
இன்று முகப்பு