அகில இலங்கையில் 331 பிரதேச செயலகங்களில் சுயசக்தி அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகளினதும் அவர்களுடைய குடும்பத்தில் வாழ்கின்றவர்களினதும் வாழ்க்கை நிலையை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு மாற்றுத்திறனாளினதும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களினதும் தலைமையில் இந்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்து. மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்துவதும் அவர்களின் உரிமைகள் தொடர்பாக அறிவூட்டுவதும் இந்த அமைப்பினால் மேற்கொள்ளப்படுகின்றது.
சுயசக்தி அபிமானி தேசிய விருது வழங்கலிள் நோக்கம்
சமூக சேவைகள் திணைக்களத்தினால் சுயசக்தி அமைப்புகளின் செயற்பாட்டை மேம்படுத்தும் நோக்கத்தில் அவ்வமைப்பு, அங்கத்தினர்கள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குகின்ற நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகளின் திறன்களை வளர்க்கின்ற திறன்விருத்தி நிலையங்கள் என்பவற்றை பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய அடிப்படையில் மதிப்பீட்டுக்கு உட்படுத்தும்.
போட்டி பிரிவுகள்
- சிறந்த சுயசக்தி அமைப்பைத் தெரிவுசெய்தல்
- சிறந்த சுயசக்தி அங்கத்தவரைத் தெரிவுசெய்தல்
- சிறந்த சுயசக்தி கருத்திட்டத்தை / நிகழ்ச்சித்திட்டத்தைத் தெரிவுசெய்தல்
- சுயசக்தி அமைப்பின் வழிகாட்டலில் வீட்டு மட்டத்தில் வெற்றிகரமாக சமூகமயப்படுத்தப்பட்ட அங்கத்தவரைத் தெரிவுசெய்தல்
- சிறந்த SMART புத்தாக்குநரைத் தெரிவுசெய்தல்
- வினைத்திறன்மிக்க பிரதேச செயலக பிரிவு அடிப்படையில் சேவை வழங்கிய உத்தியோகத்தர் / மாவட்ட மட்டத்தில் சேவை வழங்கிய உத்தியோகத்தர் / வினைத்திறன்மிக்க வைத்தியசாலைகளில் நோயாளிகளுக்கு சேவை வழங்கிய உத்தியோகத்தர் ஆகியோரைத் தெரிவுசெய்தல்
- மாற்றுத்திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்காக பங்களிப்புச்செய்த சிறந்த தொழில் தருநரை அல்லது நிறுவனத்தை தெரிவுசெய்தல்
- மாற்றுத்திறனுள்ள பிள்ளைகளுக்கான சிறந்த திறன்விருத்தி நிலையத்தைத் தெரிவுசெய்தல்
மேற்குறிப்பிட்ட மதிப்பீட்டு பிரிவுகளின் கீழ் தேசிய அடிப்படையில் முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைத் தெரிவுசெய்து, தேசிய விருது வழங்கும் விழாவை நடத்தி அதில் அந்த வெற்றியாளர்களுக்கு விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப் பரிசு என்பவை வழங்கப்படும்.